Wednesday, March 19, 2014

வாழ்க்கைக்கு ஏற்ற தமிழ் பொன்மொழிகள்...

ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்.

மகிழ்ச்சியை விலைகொடுத்து வாங்க முடியுமானால் 
அந்த விலையைப் பற்றியும்
நாம் கண்ணீர்விட்டுக் கொண்டிருப்போம்.

அவசரமாக கல்யாணம் செய்து கொண்டால் 
மெதுவாக உட்கார்ந்து கொண்டுதான் அழ வேண்டும்.

உனக்கு நிறையத் தெரிந்திருந்தாலும் 
உன் தொப்பியிடமும் யோசனை கேள்.

கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது 
மிகவும் அபாயகரமானது.

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு 
நம்மை நாமே முதற்கண் புரிந்து கொள்வது அவசியம்.

அவசரமாகத் தவறு செய்வதை விட 
தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

மறக்க வேண்டியவைகளை நினைத்து வருந்துவதும்
நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் 
துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்.

தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

பணம் மட்டுமே வாழ்க்கையல்ல அதையும் தாண்டி 
மனிதன் அடைய வேண்டிய அனுபவங்கள் பல உள்ளன. 
மன நிம்மதி அன்பு தவம் தியானம் முதலிய குணங்கள் எல்லாம் 
பணத்தால் வருபவை அல்ல...

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

Visit : http://blogintamil.blogspot.in/2015/01/2_21.html

மனோ சாமிநாதன் said...

உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/