புல்லாங்குழலை
விரல்கள்
இசைக்கும்போது
கண்ணபிரான்
உழும் ஏரைத்
தோள்கள் சுமக்கும்போது
பலராமன்
கூர்கோடரியைக்
கைகள் உயர்த்தும்போது
பரசுராமன்
என்று ஏக காலத்தில்
அவதாரங்கள் கொண்டதாம்
ஒரே பூரணத்துவம்
இன்று மண்டியிடும்போது
கிருத்துவன்
தொழும்போது
இஸ்லாமியன்
சாஸ்டாங்கமாய் விழும்போது
இந்து
என
ஏக காலத்தில்
அவதாரங்கள் கொள்கின்றது
ஒரே மானுடம்...
விரல்கள்
இசைக்கும்போது
கண்ணபிரான்
உழும் ஏரைத்
தோள்கள் சுமக்கும்போது
பலராமன்
கூர்கோடரியைக்
கைகள் உயர்த்தும்போது
பரசுராமன்
என்று ஏக காலத்தில்
அவதாரங்கள் கொண்டதாம்
ஒரே பூரணத்துவம்
இன்று மண்டியிடும்போது
கிருத்துவன்
தொழும்போது
இஸ்லாமியன்
சாஸ்டாங்கமாய் விழும்போது
இந்து
என
ஏக காலத்தில்
அவதாரங்கள் கொள்கின்றது
ஒரே மானுடம்...
No comments:
Post a Comment