Wednesday, March 19, 2014

மனிதன்...

குலம் வேறு
குணம் வேறு
குருதி ஒன்றுதான்…

நிறம் வேறு
மொழி வேறு
வாழ்க்கை ஒன்றுதான்…

கண் வேறு
கனவுகள் வேறு
கண்ணீர் ஒன்றுதான்…

இனம் வேறு
மனம் வேறு
பெயர் மட்டும் மனிதன்...

No comments: