Friday, May 11, 2012

எனக்கு பிடித்த வரிகள்02 ...



விரோதி உன் குறைகளை பிறரிடம் சொல்வான்
நண்பன் உன்னிடம் சொல்வான்


தோல்விகளைக் கண்டு நீ பயந்தால்
வெற்றி உன்னைக் கண்டு பயப்படும்


அன்பு செலுத்துதல் ஆணுக்கு அழகு
புரிந்து கொள்ளுதல் பெண்ணுக்கு அழகு


இன்பத்தைப் பங்கு போட்டால் இரட்டிப்பாகும்
துன்பத்தை பங்கு போட்டால் பாதியாகும்


கல்வியின் வேர்கள் கசப்பானவை
ஆனால் கனிகள் இனிப்பானவை


பிறர் எதைச் சொன்னாலும் கேட்டுக்கொள்
உனக்கு சரி எனத் தெரிவதைச் செய்


உங்ககளது வேலையை நேசியுங்கள்
வாழ்க்கையையும் யோசிங்கள்


வென்ற பிறகும் சமாதானம் பேசுபவனே
உண்மையான வீரனாகிறான்




பிரிவு உறவை வளர்க்கும்
ஆனால் அடிக்கடி பிரிவது கசக்கும்


உன் பொறாமையால் மற்றவர்கள் தாழ்வதில்லை
நீதான் தாழ்வாய்


எழும்போது தாங்க வருகின்றவனெல்லாம்
விழும் போது தூக்க வருவதில்லை


பணம் பேச ஆரம்பிக்கும் போது
உண்மை ஊமையாகிவிடும்


எதிரியை வெல்வதைவிட
அவனைப் புரிந்து கொள்வதே மேல்


நாம் நம் செயல்களால் வாழ்கிறோம்
ஆண்டுகளால் அல்ல


உங்கள் மனம் பிழை என்று சொல்வதை
ஒருபோதும் செய்யாதீர்கள்


ஏமாற்றிப் பெறுகின்ற எல்லாம்
பெற்றவரையே ஏமாற்றிப் போய்விடும்


முடியும் என்று நினை
முடிவு என்று நினைக்காதே


விரும்பிப் போனால் விலகிப் போகும்
விலகிப் போனால் விரும்பி வரும்


பிறருக்கு உதவி செய்ய எப்போதும்
தயாராக இருங்கள்


எந்த நிலைக்கு உயர்ந்தாலும்
வந்த நிலையை மறவாதே


நல்ல நடத்தையை இழந்தால் மீண்டும்
அதைப் பெறுவது கடினம்


கொடுத்து வாழ வேண்டும்
கெடுத்து வாழக்கூடாது

No comments: